அடுத்த 5 நாள் தமிழகத்திற்கு மழை! ஜில்லுனு செய்தி சொன்ன தமிழ்நாடு வேதெர்மேன்! - Seithipunal
Seithipunal


தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தகவல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் வானிலை குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பு : இது அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்பு கிடையாது. தனியார் வானிலை ஆர்வலரின் அறிவிப்பு மட்டுமே. அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TAMILNADU WEATHERMAN REPORT 12042024


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->