இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்!
Tamilnadu rain update 30112023
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 2.12.2023 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளின் 19 சென்டிமீட்டர் மழையும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

English Summary
Tamilnadu rain update 30112023