இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடக்கு திசையில் நாளை முற்பகல் தீவிர புயல் கடக்க கூடும். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வரை வீச கூடும். 

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் கனமழையும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகள் இடிமினலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பகுதிகளில் 29 சென்டிமீட்டர் மழையும் ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu rain update 04122023


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->