இன்று 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


வட மேற்கு திசையில் மிக்ஜாம் புயல் நாளை நகர்ந்து முற்பகல் மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். 

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி காலிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அதிக கனமழையும் ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொருத்துவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் 15 சென்டிமீட்டர் மழையும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu rain update 03122023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->