ஹேக்கர்களுக்கு இடையே நடைபெறும் போட்டி! தமிழக காவல்துறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறை சார்பாக எட்டு தலைப்புகளின் கீழ் ஹாக்கர்களுக்கு இடையே போட்டி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக முப்பதாயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் என வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குற்றம் தடுக்கும் நடவடிக்கையில் சிசிடிவி காட்சிகள் பெரும் பங்கு வைக்கின்றன. அவ்வாறு கிடைக்கும் பல சிசிடிவி காட்சிகளில் பல்வேறு நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக போதிய ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். 

இந்த நிலையில் இது போன்ற குறைபாடுகளை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை ஹேக்கர்கள் என கூறப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த போட்டியானது இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறும் அணிகள் மூன்று பேர் கொண்ட குழுவாக பங்கு பெறலாம். 

காவல்துறையினர் நடத்தும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய ண்டும். முதற்கட்ட போட்டியானது டிசம்பர் 3ம் தேதி தொடங்க உள்ளது. வரும் 6ம் தேதி வரை இணையதளம் வழியாக இந்த போட்டி நடத்தப்படும். முதல் கட்ட போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu police announced Competition between hackers


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->