தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை-வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 2days rain
தமிழகத்தில் பரவலாக இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதியில் வடதமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக 6ம் தேதி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச் 7ஆம் (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu next 2days rain