பா.ரஞ்சித் படப்பிடிப்பில் விபத்து! ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்! சோகத்தில் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் நாகை பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ், ஷூட்டிங் காட்சிக்காக காரில் இருந்து குதிக்கும் ஸ்டண்ட் ஒன்றை செய்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த துயரமான சம்பவம் திரையுலகிலும், திரையணியில் பணியாற்றும் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து நாகை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகன்ராஜின் மரணம் படப்பிடிப்பு குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamil cinema pa ranjith movie shooting stunt master death


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->