சுயமரியாதை திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Suyamariyathai Thirumanankal Case
சுயமரியாதை திருமணங்களுக்கு பொது விழா அல்லது அறிவிப்பு தேவையில்லை என்று, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/court 01.jpg)
வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் செல்லாது என்று, உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணத்தை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பது சம்பந்தப்பட்டவரின் விருப்பம் என்றும், இந்து திருமண சட்டத்தின் 7ஏ பிரிவு சுயமரியாத மரியாதை திருமணங்களை அங்கீகரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/court 011.png)
உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து, இளவரசன் என்பவர் தொடர்ந்து மேல் முறையிட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
English Summary
Suyamariyathai Thirumanankal Case