பேருந்து நிலையத்தை போர்களமாக்கிய மாணவிகள்.. மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
Students fight in busstop
பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அங்கு படித்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பள்ளி மாணவிகள் சிலர் இரு குழுக்களாக பிரிந்து மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதனால், அந்த பகுதியே போர்களம் போல காட்சி அளித்தது. தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
English Summary
Students fight in busstop