கள்ளக்காதல் தீவிரம்.. மலரை பிரிய முடியாமல் மாண்டு போன மாணவன்.! உயிருக்கு போராடும் கள்ளக்காதலி.!
student suicide for illegal love
தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதிக்கு அருகே இருக்கும் முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற 20 வயது இளைஞர் பெங்களூருவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் தனது சொந்த ஊருக்கு வந்த மகேஸ்வரன் அதே பகுதியைச் சேர்ந்த மலர்கொடி என்ற 36 வயது பெண்ணுடன் கள்ள காதல் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் அவர் கண்டித்து இருக்கின்றார். விஷயம் அடுத்த கட்டத்திற்கு சென்று அதை தொடர்ந்து மகேஸ்வரன் மற்றும் மலர்கொடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சமீபத்தில் பெங்களூருக்கு சென்று குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
பெண்ணின் கணவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து மகேஷ்வரன் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். மகேஸ்வரன் பெற்றோர் அவருக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர் .பிரச்சனையின் தீவிரம் அறிந்த காதல் ஜோடிகள் பெங்களூரில் இருந்து கிளம்பி சொந்த ஊருக்கு போகாமல் பக்கத்து ஊரில் வெள்ளை கரடி என்ற பகுதியில் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மகேஸ்வரன் உயிர் இழந்து விட மலர்கொடி உயிருக்கு போராடிய நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
student suicide for illegal love