வீடு புகுந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை! கூரியர் பாய் வேஷத்தில் வந்த கொடூரன்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் புனேயில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கூரியர் டெலிவரி முகவராக வேடமிட்டு வீட்டில் இருந்த 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

புனே கோண்ட்வா பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளம்பெண், தனது சகோதரருடன் வசித்து வருகிறார். சம்பவம் நிகழ்ந்த மாலை, அவரது சகோதரர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு நபர் கூரியர் டெலிவரிக்காக வந்ததாக கூறி கதவைத் தட்டினார். பெண் கதவைத் திறந்ததும், பேனா தேவைப்படுகிறதென கூறி, அவர் திரும்பும் போது அவ்வநபர் வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார்.

இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெண்ணின் நினைவறிவு மங்கியது. பின், உணர்வு திரும்பியதும் நடந்ததைக் உணர்ந்து, உடனடியாக உறவினர்களை தொடர்பு கொண்டார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனது மொபைலில் அந்த நபர் எடுத்திருந்த செல்ஃபி புகைப்படமும், புகார் அளித்தால் அதை வெளியிடுவேன் என மிரட்டும் மெசேஜும் பெண்ணுக்கு கிடைத்துள்ளது. மயக்கம் ஏற்படும் வகையில் ஸ்பிரே போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நபரின் முகம் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதால், அவரை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maharashtra young woman harassed


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->