பெற்றோர் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்ச்சித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அக்‌ஷயா(17) என்ற மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என்பதால், அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மன வேதனை அடைந்த மாணவி அக்‌ஷயா தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு:

[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள்:

மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104

சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 

உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student attempts suicide by drinking poison in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->