பத்து மாத கால திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக இருப்பதாக பெண்கள் கூறுகிறார்கள்! விழுபுரத்தில் முதலமைச்சர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


எந்த குறையும் இல்லாமல் திமுக ஆட்சி சிறப்பாக இருக்கின்றது என பெண்கள் கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஒழுந்தியாம்பட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.24.77 கோடி ஆகும்.

மேலும், ரூ.42 கோடி மதிப்பில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலம் ஆகியுள்ள நிலையில், பெண்களிடமும், தாய்மார்களிடமும் கருத்து கேட்கப்பட்டதாகவும், அதில் அவர்கள், எந்தவித குறையும் இன்றி ஆட்சி சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறியதாகவும், இது இனியும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சமத்துவபுரங்களில் 90 சதவீத மக்கள் இன்னமும் அதே வீடுகளில் ஒற்றுமையாக வாழ்வதாகவும், இதுவே தனக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார். கருணாநிதியின் சிந்தனைகளை, கொள்கைகளை எனது மூச்சு இருக்கும் வரை கொண்டு செல்லப்பிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin speech in Villupuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->