தமிழக மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. 3 மீனவர்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் 11 மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது.

மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள மீன், வலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் தமிழக மீனவர்களையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srilanka Coastal Guard attack tamilnadu fisherman


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->