வேலூரில் விளையாட்டு விழா..வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு!  - Seithipunal
Seithipunal


வேலூர் அன்னை மீரா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர்மாவட்டங்களின் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.கணேசன் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 

வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக கல்லூரி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த தொடக்க விழாவிற்கு கல்லூரி நிறுவனர், தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர், பொருளாளர் ஜி. தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சர்வதேச கூடைப்பந்து வீரரும், வருமான வரித்துறை ஆய்வாளருமான பி.ஜீவானந்தம், கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபமேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் 100 மீ ஓட்டம், 200 மீஓட்டம், குண்டு எரிதல், 400 மீதொடர் ஓட்டம், அம்பு எறிதல், கிரிக்கெட், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர்மாவட்டங்களின் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.கணேசன் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி விளையாட்டின்அவசியத்தையும் அதன் நன்மைகளையும் விளக்கிக் பேசினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் டி.கே. கோபிநாதன், துணை முதல்வர் டி. சரவணன், நிர்வாக அதிகாரி எஸ். சாண்டில்யன், இயக்குநர்கள் ஆர். பிரசாந்த், டி.கிஷோர் உடற்கல்வி இயக்குநர் சதீஷ்குமார், உள்பட பலர்கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sports festival in Vellore medals awarded to the winning students in appreciation


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->