தந்தையை பீர் பாட்டிலால் குத்திய மகன்.. மடக்கி பிடித்த போலீசார்..! பொள்ளாச்சி அருகே பரபரப்பு...!
Son who stabbed his father with a beer bottle in Pollachi
கோவை மாவட்டத்தில் தந்தையை பீர் பாட்டிலால் குத்திய மகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாரிமுத்து (49). இவரது மகன் முருகானந்தன் (29). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தந்தை மாரிமுத்துடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பத்தன்று குடிபோதையில் வந்த முருகானந்தன், மீண்டும் குடிப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஆனால் மாரிமுத்து பணம் இல்லை என்று கூறியதால் இவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முருகானந்தன் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் தந்தையை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தந்தையை குத்திவிட்டு தப்பி ஓடிய முருகானந்தனை கைது செய்தனர்.
English Summary
Son who stabbed his father with a beer bottle in Pollachi