இது என்ன நியாயம்?... மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 'மாமியாரை' குத்தி கொலை செய்த மருமகன்.! - Seithipunal
Seithipunal


கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டிலிருந்து மனைவி வெளியே சென்றதால் கோபமடைந்த கணவர் மாமியாருடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியில் சார்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் திருமணமாகி இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி  கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதாக தனது கணவரின் வீட்டில் இருந்து வெளியேறினார் விஜயலட்சுமி. இதுவரை அவர் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ஆம் தேதி கணவர் ஏழுமலை தனது மாமியார் வசிக்கும் பகுதிக்கு சென்று தனது மனைவியை அவர்தான் மறைத்து வைத்திருக்கிறார் எனக் கூறி மது போதையில் தகராறு செய்துள்ளார். இதில் ஏழுமலைக்கும் அவரது மாமியாருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றவே தான் வைத்திருந்த கத்தியால் மாமியாரை குத்தி இருக்கிறார் ஏழுமலை. இதில் படுகாயமடைந்த ஏழுமலையின் மாமியாரை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஏழுமலையின் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son in law arrested for killing mother in law in dispute with wife


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->