விழித்து விட்ட தமிழனை வீழ்த்தி விட முடியாது - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
Social Justice Party start day chief minister mk stalin twitter post
இன்று சமூக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"இன்று சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள். சாதியின் பெயரால் கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை, மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இட ஒதுக்கீடு என்று நமது நெடும் பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட நாள்.
இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம். தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில் சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை.
இது ஒரு வரலாறு காட்டும் வெளிச்சம். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்து விட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா... விழி..., எழு..., நட... என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Social Justice Party start day chief minister mk stalin twitter post