வாகன சோதனையின் போது பிடிபட்ட கடத்தல் பணம்...! நடந்தது என்ன?
smuggled money was seized during a vehicle check
திருவாரூரில் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீரனூர் சோதனை சாவடியில் காவலர்கள் தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியிலிருந்து வெளிமாநில மதுபானம் கடத்தி வரப்படுகிறதா? என்பது குறித்து சோதனை அவ்வப்போது நடந்து வருகிறது.

அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசுப்பேருந்து ஒன்றை நிறுத்தி காவலர்கள் சோதனை நடத்தினர்.அந்தப்பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை காவலர்கள் சோதனை செய்தனர்.
அதில் ரூ.20 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து காவலர்கள் அந்த பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கோலாலம் பள்ளம் பகுதியை சேர்ந்த முகமது யூனுஸ் என்பதும், அவரிடம் ரூ.20 லட்சத்தை திருவாரூரை சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் முகமது யூனுஸ் வீட்டிற்கு வந்து ஒருவர் குறியீடு ஒன்றை வழங்குவார் என்றும், அதனை பெற்றுக்கொண்டு அந்த நபரிடம் பணத்தை தர வேண்டும் என்றும் தன்னிடம் தகவல் தெரிவித்ததாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, முகமதுயூனுசை கைது செய்த காவலர்கள் அவரிடம் தொடர்ந்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
smuggled money was seized during a vehicle check