ஜாய் கிரிசில்டா விவகாரம்! மாதம்பட்டிக்கு சுத்துப் போட்ட காவல்துறை..வீட்டுக்கே பறந்த சம்மன்!
Joy Crisilda affair Police raided Madhampatti summons flew home
சென்னை – பிரபல சமையல் கலைஞர் மற்றும் கேட்டரிங் நிறுவனர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான பரபரப்பான புகார் விசாரணை தொடர்கிறது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கப்பமாக்கி ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி, புகார் கொடுத்தார். இதன்படி, சென்னை காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ரங்கராஜுக்கு விசாரணைக்கு ஆஜராகும் சம்மன் அனுப்பியுள்ளது. அவருக்கு வருகிற 26ம் தேதி ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டாவின் புகாரில் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அவர் கூறியதாவது –"எனக்கும், எனது குழந்தைக்கும் நீதி வேண்டும். இதற்காக நான் எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது"
ஜாய் கிரிசில்டா தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். சுமார் 6 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடைபெற்றது.
மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் உள்ளிட்ட படங்களில் தனது சமையல் திறமையால் பிரபலமானவர். விஜய் டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். குடும்பமாக, ஸ்ருதி என்பவருடன் திருமணம் செய்து, இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா ரங்கராஜின் கோயிலில் திருமண புகைப்படங்களையும், அவர் தன்னுடன் நெருக்கமாக இருப்பதை காட்டும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிரான இந்த புகார், அவரது செல்வாக்கு, பணம் போன்ற காரணங்களால் முன்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்ததும், காவல்துறை விசாரணைக்கு எடுத்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்ந்து பரபரப்பாகும் நிலையில், 26ம் தேதிக்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகும்போது என்ன முடிவு என்பதைக் அனைவரும் கவனித்து இருக்கிறார்கள்.
English Summary
Joy Crisilda affair Police raided Madhampatti summons flew home