அதிகாலையில் அதிர்ச்சி - தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து - பயணிகளின் நிலை என்ன?
15 peoples injured for accident in ulunthurpettai
ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து உளுந்தூர் பேட்டை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் பேருந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து விபத்தில், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்த போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை கிரேன் மூலம் மீட்டனர். பின்னர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
15 peoples injured for accident in ulunthurpettai