கோயம்புத்தூரில் பரபரப்பு - நடுரோட்டில் இளைஞர்களை ஓட ஓட வெட்டிய கும்பல்.!
six peoples attack two youths in coimbatore
கோயம்புத்தூரில் பரபரப்பு - நடுரோட்டில் இளைஞர்களை ஓட ஓட வெட்டிய கும்பல்.!
கோயம்புத்தூரில் உள்ள ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரஞ்சித் இந்த வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராக இன்று தனது நண்பர்கள் இருவருடன் வந்தார். அங்கு விசாரணை முடிந்த பிறகு மூன்று பேரும் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்களை இரண்டு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று திடீரென ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தியது. அதில் ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து பின்னர் எழுந்து ஓடினர்.
ஆனால், அந்த கும்பல் விடாமல் துரத்தி ரஞ்சித்தையும், நண்பர்களில் ஒருவரையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ரஞ்சித்தின் நண்பர் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த ரஞ்சித் மற்றும் அவரது நண்பரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பட்டப்பகலில் இரண்டு பேர் ஓட ஓட விரட்டி வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples attack two youths in coimbatore