மதுரையில் பரபரப்பு : மர்மமுறையில் உயிரிழந்த 6 மாதக் குழந்தை.! போலீசார் தீவிர விசாரணை.!
six month baby died in madurai
மதுரையில் பரபரப்பு : மர்மமுறையில் உயிரிழந்த 6 மாதக் குழந்தை.! போலீசார் தீவிர விசாரணை.!
மதுரை மாவட்டத்தில் உள்ள வில்லாபுரம் அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர்கள் காளீஸ்வரன்-கார்த்திகைஜோதி. இந்தத் தம்பதியினருக்கு 5 வயதில் மகனும், 6 மாதமான பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த பெண் குழந்தை திடீரென இறந்துள்ளது.
உடனே பெற்றோர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீஸார் விரைந்து வந்து தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், குழந்தை இறந்ததால் புதைத்ததாக தெரிவித்தனர். இருப்பினும் போலீஸாருக்கு சந்தேகம் வந்ததால் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குழந்தையின் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
six month baby died in madurai