தமிழக அரசு மருது பாண்டியர்களின் வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும் - மதுரை ஆதீனம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது பாண்டியர் நினைவு தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த வருடம் 221-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பயங்கரமாக செய்யப்பட்டது. 

இந்நிலையில், மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு  சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட ஆறு வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து, மருது பாண்டியர் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, "மருது பாண்டியர் பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. 

அவரைப் பற்றி அவருடைய சமுதாயக்காரர்களுக்குத் தெரிகிறதே ஒழிய இளைஞர்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனவே தமிழக அரசு மருது பாண்டியர்களின் வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும். அதற்காகத் தபால் தலையையும் வெளியிட வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை மருது பாண்டியர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.'' என்றுத் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sivakangai marudhu pandiyar Memorial Day


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->