எடப்பாடி – தனியரசு ரகசிய சந்திப்பு: கூட்டணி கணக்கில் புதிய திருப்பம்...!
Edappadi Thaniarasu secret meeting new twist alliance calculations
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்குகளுடன் தொடர்புடையதாக பேசப்படுகிறது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவையை இணைப்பது குறித்த ஆலோசனையே இந்த சந்திப்பின் மையக் கருத்தாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மேடையில் என்.டி.ஏ. கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
அதற்குள் கூட்டணி அமைப்பை இறுதி செய்யும் பணிகள் பின்னணியில் வேகமெடுத்து வருகின்றன.இந்த சூழ்நிலையில் தனியரசு – எடப்பாடி சந்திப்பு நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு தீனி போட்டுள்ளது.
மேலும், கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து தனியரசு பேசியிருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. தலைமையுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.
English Summary
Edappadi Thaniarasu secret meeting new twist alliance calculations