நெற்குன்றம் அதிர்ச்சி! 10,000 சதுர அடி ஆக்கிரமிப்பு கட்டிடம் JCB மூலம் தரைமட்டம்...!
Shock in Nelkundram 10000 square feet encroaching building razed ground by JCB
நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில், Nearly 10,000 sq.ft பரப்பளவைக் கொள்ளை கொண்டிருந்த மிகப்பெரிய ஆக்கிரமிப்பு கட்டிடம் இன்று அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,“உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவினைப் தொடர்ந்து, வளசரவாக்கம் மண்டலம், வார்டு–145, நெற்குன்றம் பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக எழுந்திருந்த, தரைத்தளத்துடன் இரண்டு மாடிகளில் கட்டப்பட்ட சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான ஆக்கிரமிப்புக் கட்டிடம், இன்று (12.12.2025) மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் JCB இயந்திரங்கள் பயன்படுத்தி முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பணிப்புரைப் பிரிவினர் மட்டுமன்றி, காவல் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Shock in Nelkundram 10000 square feet encroaching building razed ground by JCB