ஆசைவார்த்தை கூறிசிறுமிக்கு பாலியல் தொல்லை..வாலிபர் கைது!
Sexual harassment on a minor under the pretext of a love proposalYouth arrested
எண்ணூரில் ஆசைவார்த்தை கூறிசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ,என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து செல்கிறது, சமீப காலமாக பள்ளி மாணவிகள் முதல் சிறிய பெண்கள் முதல் பெரிய பெண்கள் வரை அவர்களுக்கு பாலில் தொல்லையானது அளிக்கப்பட்டு வருகிறது, சட்டங்கள் கடுமையான தண்டனை வழங்கினாலும் ஒரு சில இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
எண்ணூரில் ஆசைவார்த்தை கூறிசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு கோடை விடுமுறையில் எண்ணூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்த 21 வயதான நரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நரேஷ் ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார் என தெரிகிறது.
இந்த நிலையில் சிறுமி கடந்த மாதம் கோடை விடுமுறைக்காக எண்ணூருக்கு சென்றபோதும் நரேஷ் ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நரேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Sexual harassment on a minor under the pretext of a love proposalYouth arrested