பெரியபாளையம் அருகே பதற்றம்: பள்ளி மாணவர்கள் வேனில் கார் மோதி விபத்து: வாகனத்தில் தீ பற்றியதால் அலறியடித்த மாணவர்கள்..!
School students van collides with car near Periypalayam, students scream as vehicle catches fire
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது கார் மோதியதில் வாகனத்தில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பெரியபாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று முக்கரம்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஊத்துக்கோட்டை சாலை வழியே சென்ற குறித்த பள்ளி வேன் பெரியபாளையம் கோவில் நின்ற போது அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் வேன் குலுங்கியதில் பள்ளி மாணவர்கள் முன்னால் உள்ள சீட்டிலும், கம்பியிலும் மோதி லேசான காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் போது காரில் இருந்து புகை வந்ததை கண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளார். அந்நிலையில், காரின் முன் பகுதியில் தீப்பற்றி வேனிற்கும் தீ பரவியது.
இதனையடுத்து, வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர். அப்போது பள்ளி மாணவர்களை வேனில் இருந்து இறங்கி பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு அருகில் இருந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். கார், வேன் தீப்பற்றியதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
English Summary
School students van collides with car near Periypalayam, students scream as vehicle catches fire