சேலத்தில் அதிர்ச்சி : சிறுமியிடம் முதலிரவு குறித்து கேட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் - போலீசார் அதிரடி.!
school students arrested for obscene speech to girl in salem
சேலத்தில் அதிர்ச்சி - சிறுமியிடம் முதலிரவு குறித்து கேட்ட 8 ஆம் வகுப்பு மாணவன்.!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் ஆனந்த். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர் பதின்மூன்று வயது சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து, பேச வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
அதன் படி சிறுமியும், தனது தந்தையின் செல்போனில் இருந்து அந்த இளைஞருக்கு அழைப்பு விடுத்து பேசியுள்ளார். அப்போது அந்த இளைஞர் முதலிரவு என்றால் என்னவென்று தெரியுமா? என்று கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனே அவர்கள் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டு இளைஞர் ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school students arrested for obscene speech to girl in salem