பாஜக முன்னாள் வேட்பாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ?! பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


பாஜக முன்னாள் நிர்வாகியை, சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்,. முன்னாள் பாஜக நிர்வாகியான இவரை சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜா தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பாக இருமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ்குமார், வழக்கறிஞர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ ராஜாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக விதித்துள்ளது.

இதில், பாஜக முன்னாள் நிர்வாகி ராஜ்குமாரை, திமுக  எம்எல்ஏ ராஜா தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாக ராஜ்குமாரின் மனைவி கோபிகா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sankarankovil DMK MLA Raja


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->