கோவையில் கேரள பெண்ணிடம் பல கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல்! - Seithipunal
Seithipunal


கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 6) இரவு இறங்கிய பெண் பயணியிடம் இருந்து மூன்று கிலோக்கும் அதிகமான உயர் தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, சிங்கப்பூர் வழியாக கோவையை வந்த அந்த பெண் மீது சுங்கத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சோதனையில் 3.155 கிலோ கஞ்சா இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், கோவையில் இறங்கிய பின் கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பல கோடி மதிப்புடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பொழுது, இந்தக் கஞ்சா கடத்தலில் யார் தொடர்புடையர், யாரிடம் ஒப்படைக்கச் சொன்னார்கள் என்பதையும் உறுதி செய்ய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai airport Ganja kerala woman


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->