சேலம் வாழப்பாடியில் கொடூர கார் விபத்து! 3 பேர் பலி!
Vazhapadi Car Accident
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நான்கு பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.