ஏழாவது நாளாக நீடிக்கும் தடை! 18000 கன அடியாக குறைந்த ஒகேனக்கல் நீர்வரத்து! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழையால் கேரளா மற்றும் கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக  கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும் மற்றும் கபினி அணையும் நிரம்பி வழிந்தன . மேலும், அணையின் பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளிருந்து தமிழக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு இருந்தது.

இதனால் தர்மபுரி சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20000 கன அடியாக வந்தது.ஆனால், தற்போது கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது.

இதனால்,அணைகளின் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்றைய நிலவரப்படி 18000 கன அடியாக குறைந்து வந்தது.மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் மாவட்ட கலெக்டர் சதீஸ், நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்க 7-வது நாளாக  தடை விதித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.  மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ban continues seventh day Hogenakkal water flow reduced to 18000 cubic feet


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->