ரூ.25,000 அபராதம்! சென்னையில் காலி மனைகள் வைத்திருப்போர் கவனத்திற்கு - சென்னை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலங்களை வைத்துள்ள உரிமையாளர்களுக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நிலத்தில் செடிகள், குப்பைகள் மற்றும் மழைநீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும்.

எல்லையைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைக்க வேண்டும்.

திடக்கழிவு, கட்டிட கழிவுகள் உள்ளிட்டவற்றை குவித்து வைக்கக் கூடாது. பொதுநலத்திற்கு கேடு விளைவிக்கும் கழிவுகளை எரிக்க கூடாது.

மேலும், செடிகள் மிகுந்து வளராதவாறு கவனிக்க வேண்டும்.

இந்த நெறிமுறைகளை மீறுவோர் மீது ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் மீறல் தொடருமெனில், நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Corporation Guidelines Vacant lands 


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->