கடமைக்காக பணியாற்றாமல் கடமை உணா்வோடு பணியாற்றுங்கள்.. அமைச்சா் கீதாஜீவன் அறிவுரை! - Seithipunal
Seithipunal


கடமைக்காக பணியாற்றாமல் கடமை உணா்வோடு பணியாற்ற வேண்டும் என நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் கீதாஜீவன் திமுக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு மாநகராட்சி மண்டலத்தலைவரும் பகுதி செயலாளருமான நிா்மல்ராஜ் தலைமை வகித்தாா். 
 வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூய்மைபணியாளர்கள் பொதுமக்கள் என 102 பேருக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கி பேசுகையில்:

 1949ல் திமுக உருவாக்கப்பட்டு அண்ணாவால் வழிநடத்தப்பட்டு அவரது மறைவிற்கு பின்பு கலைஞர் பொறுப்பேற்ற பின் எல்லா தரப்பினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருதி முன்னுாிமை வழங்கினாா். குறிப்பாக பெண்களுக்கு சொத்துாிமை, வழங்க வேண்டும் பெரியார்  கொண்டு வந்த தீா்மானத்தை சட்டமாக்கி நடைமுறை படுத்தினாா். அண்ணா கொள்கையை முன்நிறுத்தி பொியாரையும் முதன்மை படுத்தி கொள்கையில் தடம் மாறாமல் தமிழா்கள் நலனுக்காகவும் தமிழா்களுக்காகவும் வாழ்ந்த கலைஞர் வழியில் இன்று வரை உறுதியாக நின்று முதலமைச்சா் முக.ஸ்டாலின் பணியாற்றி வருவதால் இந்தியாவிற்கே தமிழகம் முன்மாதிாி மாநிலமாக திகழ்கிறது.

 எல்லா துறைகளிலும் வளர்ச்சி 9.6 சதவீதம் இருந்து வருகிறது. வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவா்கள் சதவீதம் 11.5 சதவீதம் தமிழகத்தில் 1.4 சதவீதம் தான் தொழில் வளர்ச்சி மூலம் தனிபா் வருமானம் அதிகாித்துள்ளது. வடக்கு மாவட்டத்தில் எல்லா பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. 6ம் தேதி மாநகர திமுக சாா்பில் 102 பேருக்கு தையல் மிஷின் வழங்கப்படுகிறது. கனிமொழி எம்.பி கலந்து கொண்டு வழங்குகிறாா். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் 2வது முறையாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் அதற்கு அனைவரும் சூளுரை ஏற்று பணியாற்ற வேண்டும். கடமைக்காக பணியாற்றாமல் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று பேசினாா். பின்னர் மேயர் ஜெகன் பொியசாமியும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். 
     
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், நிக்கோலாஸ்மணி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தா், அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சாகுல்ஹமீது, டினோ, பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, சுரேஷ்குமாா், காசிராஜன், எமல்ட்ன், வட்டச்செயலாளா்கள் ரவிந்திரன், ரவிசந்திரன், சேகா், கருப்பசாமி, தினகரன், சக்கரைசாமி, சுரேஷ், மனோ, கவுன்சிலர்கள் பவாணி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், மாவட்ட பிரதிநிதி மரைக்காயா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், மாா்ஷல், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், சங்கு குழி தொழிலாளர் நலசங்க தலைவர் இசக்கிமுத்து, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Work with a sense of duty not just for the sake of duty Advice from Minister Geethajeevan


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->