#சேலம் || மகளை கடத்தி சென்ற நாடக காதலன்., மீட்க சென்ற இடத்தில் தந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தனது மகளை ஒரு 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்திக் சென்ற நிலையில், மகளை மீட்க சென்ற தந்தை நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அடுத்த மணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். 46 வயதான இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவரின் இரண்டாவது மகளை, சேலம் மூங்கில்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் ஆசை வார்த்தை கூறி, காதல் செய்வதாக நாடகம் நடத்தி சேலத்திற்கு கடத்தி வந்ததாக முருகனுக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து முருகன் மற்றும் அவரின் மனைவி வள்ளி மற்றும் உறவினர்கள் நேற்று சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து, மகளை கடத்தி சென்ற அந்த சிறுவனிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளனர்.

அந்நேரம் முருகனுக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முருகன் விஷம் அருந்தியதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இன்று பிரேத பரிசோதனை செய்த பின்னரே முருகன் எவ்வாறு இருந்தார் என்பது குறித்த உண்மை தன்மை வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem drama love issue father mystery dead


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->