மூதாட்டியைக் குறிவைத்த கொள்ளையன்! காவலர்கள் நடத்திய துரித செயலால் தங்க சங்கிலி 1 மணிநேரத்தில் மீட்பு...!
Robber targets elderly woman Gold chain recovered 1 hour due to quick action by police
கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த 65 வயது கலைச்செல்வி, தனது பேரன்களை பள்ளி பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர், கலைச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை அசத்தலாக பறித்து, மின்னல் வேகத்தில் ஓடினர்.

இதனால்,அதிர்ச்சியடைந்த மூதாட்டி உடனே கிருஷ்ணகிரி டவுன் காவலில் புகார் செய்தார். மேலும், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, கொள்ளையன் அடையாளம் பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் காவலர்களுக்கு அனுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி, சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள் குப்பம் சாலையில் குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே சந்தேக நபரை காவலர்கள் நிறுத்தி விசாரித்ததில், அவர் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது ஜெகதீஸ்வரர் சுதர்சன்குமார் என அறியப்பட்டது.
மேலும் இதுகுறித்த விசாரணை முடிவில், கொள்ளையனை கைது செய்து, பறிக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மற்றும் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Robber targets elderly woman Gold chain recovered 1 hour due to quick action by police