விக்கிரவாண்டியில் சாலை விபத்து – கார் தீப்பற்றி எரிந்து 3 பேர் பலி!
Road accident in Vikravandi 3 people killed as car catches fire
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்து, பலரையும் உலுக்கியுள்ளது.
சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றது. சாலை மைய தடுப்பில் மோதிய கார், பின்னர் அப்பாதையில் சென்ற லாரியுடன் மோதி, உடனே தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கர விபத்தில், கார் உள்ளே இருந்த மூவர் – சம்சுதீன், ரிசி, மோகன் – சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதே காரில் பயணம் செய்த அப்துல் அஜிஸ் மற்றும் தீபக் ஆகிய இருவரும் கடுமையான காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலிசார் விசாரணையில், காரை ஓட்டியவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தி, சாலையை சுத்தம் செய்து வாகன ஓட்டத்தை சீரமைத்தனர்.
இந்த துயர சம்பவம், நீண்ட தூரப் பயணங்களில் ஓட்டுநர்கள் ஓய்வு எடுத்து பயணிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
English Summary
Road accident in Vikravandi 3 people killed as car catches fire