சுத்தம் செய்தபோது வெடித்து சிதறிய துப்பாக்கி - ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்.!
retired army man died in madurai for blast gun
மதுரை மாவட்டத்தில் உள்ள பெத்தானியாபுரம் தாமஸ் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் அருகில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக அவருடைய கை பட்டு துப்பாக்கி வெடித்ததில் அவரது வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், ராஜேந்திரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
retired army man died in madurai for blast gun