மீண்டும் தீவிரமடையும் பருவமழை - மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து இருந்த நிலையில், தற்போது மழையின் வேகம் குறைந்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக பகுதிகளை நோக்கி நகர உள்ளதாகவும், தமிழக கடற்கரை அருகே மெதுவாக நகர்ந்து செல்லவும், மையம் கொள்ளவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பரவலாக இருக்கும். இந்த மழை நிகழ்வு வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இருக்கும்.

இந்த மழை முடிந்த அடுத்த 4 நாட்களுக்கு பிறகு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, புயலாகவும் வலுப்பெறக் கூடும். அது தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்னைக்கும்-நாகைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும். 

அப்போது காற்றுடன் கூடிய மழையை கொடுக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rain start in tamilnadu coming 10th


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->