Breaking | தமிழகத்தில் நாளை இரு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை! - Seithipunal
Seithipunal


மழை காரணமாக நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மழைக்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்து வரக்கூடிய 4 நாட்ட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு (7.00 pm) திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain Alert Kanjipuram Thiruvallur school college leave


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->