வேங்கைவயல் விவகாரம்: ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!  - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் குடிநீர் தொட்டையில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், இதுவரை ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு முக்கிய காரணம் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய அந்த குடிநீர் தொட்டியில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் மலம் கலந்ததாக ஒரு சில குற்றச்சாட்டுகள் எழுந்தது தான் இந்த பெரும் அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க டி என் ஏ பரிசோதனைகள் எல்லாம் செய்யப்பட்டது.

இதில் பட்டியல் இனத்தை சேர்ந்த சிலரும் டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன உட்படுத்தப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி பட்டியல் இனத்தை சேர்ந்த சிலருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை இந்த வழக்கில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சிகள் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

இந்த நிலையில், இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என்று, தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் தீர்க்கமான முடிவை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Vengaivayal TNPolice  Chennai HC


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->