நாமக்கல் இளைஞர்களே ஓர் அரிய வாய்ப்பு... 19-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்.! மிஸ் பண்ணிடாதீங்க...!
Private employment camp on May 19 in namakkal
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் (19ஆம் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாம் மூலம் பணிவாய்ப்பு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Private employment camp on May 19 in namakkal