வரும் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு.!!
president droubati murmu come in tamilnadu septembar 2
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலை நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கவுள்ளார். இதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.
அங்கு மதிய உணவை முடித்துவிட்டு 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து குடியரசுத் தலைவர் முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார்.
அங்கு பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவரின் இந்த திருச்சி மற்றும் திருவாரூர் வருகையை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
English Summary
president droubati murmu come in tamilnadu septembar 2