பெரம்பலூர் | விபத்தா? கொலையா? உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசிவிட்டு தப்பி ஓடிய நாடக காதலன் கைது! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம், அல்லிநகரம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த அபிநயா (23 வயது) என்ற இளம் பெண், தன் குடும்பத்தின் வறுமை காரணமாக அரியலூர் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கு செல்கிறேன் என்று மளிகை கடையின் ஓனரிடம் தெரிவித்துவிட்டு அபிநயா புறப்பட்டு உள்ளார். ஆனால், அவர் தனது வீட்டுக்கும் செல்லவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை உடையார்பாளையம் நெடுஞ்சாலை ஓரமாக தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார் அபிநயா. அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தஞ்சை : பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33 வயது) என்ற இளைஞருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில். அபிநயாவை திருமணம் செய்து கொள்வதாக பார்த்திபன் நம்பிக்கை அளித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, பார்த்திபனின் பெற்றோர் அவருக்கு மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். வருகின்ற ஆறாம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், பார்த்திபன் தந்து திருமண பத்திரிகை கொடுப்பதற்காக உடையார்பாளையம் வந்துள்ளார்.

அப்போது பார்த்திபனை சந்தித்த அபிநயா, தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், இருவரும் ஜெயங்கொண்டம் நோக்கி திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் கவனம் சிதற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி, பார்த்திபனுக்கு பின் தலையில் அடிபட்டுள்ளது. மேலும், அபிநயாவுக்கு தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், தான் காதலித்த பெண், தந்தை இல்லாத பெண் என்ற சிறிது இரக்கம் கூட இல்லாமல், சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிநயாவை, சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளான் அந்த நாடக காதலன் பார்த்திபன்.

இருப்பினும் தனது திருமணத்திற்கு தடையாக இருந்த காதலியை பார்த்திபன் அடித்து கொலை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறாரோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

இந்த சம்பவம் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதியில் பெரும் பரப்பரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தந்தையை இழந்த அந்தப் பெண்ணின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் #JusticeForAbhinaya என்ற ஹேஸ்டேக் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prambalur Justice For Abinaya


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->