ராமநாதபுர மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்சாரம் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணைமின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரியமான் முதல் மண்டபம் வரை நாளை (02.08.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் 05.00 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் 110-33/11 KV துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் மண்டபம் வரை சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம் முகாம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம் ஆகிய இடங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்" அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power outage tomorrow in Ramanathapura district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->