சென்னை | நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில் வீச்சு! திருப்பி அடித்த அடியில் தலை தெறிக்க ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர்! - Seithipunal
Seithipunal


சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில் வீச்சு சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அருந்ததியின மக்களை தெலுங்கர்கள் என்று சீமான் பேசியதாகக் கூறி, ராமநாதபுரம் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கற்கள், பாட்டில் வீசி ரவுடிசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அருந்ததியர்களை சீமான் தவறாக பேசியதாக, அக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முயன்ற ஆதித்தமிழர் பேரவை அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், சுமார் 10 பேர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்தனர்.

பின்னர் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் பாட்டிலையும், கற்களையும் வீசி ரவுடிசத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கட்சி அலுவலகத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், கல் வீசிய நபர்களை தடுத்து நிறுத்தி பதில் தாக்குதல் நடத்தினர். தற்போது போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Porur Naam Thamilar party office attack


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->