சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு: சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி தேடுதல் வேட்டை..! - Seithipunal
Seithipunal


சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன் மூர்த்தியை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் CBCID போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அத்துடன், அவரை கைது செய்து காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன் மூர்த்தியை பிடிக்க 04 தனிப்படை அமைத்து சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன்  தீவிரம் காட்டி வருகின்றனர். 

தற்போது ஜெகன் மூர்த்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் பூவை ஜெகன்மூர்த்தியுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் விவரங்களை சேகரித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poovai Jagan Murthy absconding in child abduction case CBCID searches with the help of cybercrime police


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->