செங்கல்பட்டில் பாமக நகர செயலாளர் வெட்டிக் கொலை - தப்பியோடிய வாலிபருக்கு துப்பாக்கிச் சூடு.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டில் செங்கல்பட்டில் பாமக நகர செயலாளர் நாகராஜ் என்பவரை வெட்டிக் கொலை செய்த மர்மக்கும்பலில் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணிகூண்டு அருகே பாமக நகர செயலாளர் நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகராஜனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாகராஜனின் உடலை மருத்துவமனை வளாகத்தில் வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்த நிலையில், போலீசாரின் தீவிர முயற்சியால் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கும்பலில் அஜய் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதில், காலில் காயமடைந்த அஜய் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற ஐந்து பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police shoot one person for killed pmk suppoter in chengalpat


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->