வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை பத்திரமாக மீட்ட காவல் அதிகாரி: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி வெள்ளைக்காடாக மாறியது.

சென்னையில் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மாதவரம், மணலி, எண்ணூர், தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது. 

இதனால் அந்த பகுதியில் உள்ளவர்களை படகுகள் மூலம் மீட்பு குழு 3 வது நாளாக இன்றும் தீவிரமாக மீட்டு வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்திரமாக மீட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்தில் காவலர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு புன்னகையுடன் கொஞ்சியபடி நடந்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police rescued family trapped rain flood


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->